புதன், 1 டிசம்பர், 2010

சுய புலம்பல்

வாழ்க்கை என்ன ஒரு விசித்திரமான அனுபவம். பிறப்பும் அதனை ஒட்டிய சிறு வயது அனுபவங்களும் ,குடும்ப உறவுகளும் பரந்த இந்த வெளி உலகமும் ,வளர்ந்த விதமும் , அந்தந்த வயதின் தேடுதல்களும் விரைந்து செல்லும் புகைவண்டியின் பயணத்தில் கடந்து செல்லும் காட்சிகளாக மறைந்து விடும் அதிசயமும் வியப்பாகத்தான் உள்ளது.
வாழ்க்கை ஒரு ஓட்ட பந்தயம் என்று நினைத்து பாதி தூரம் கடந்த பின்பு இங்கு பந்தயம் என்பதே இல்லை என்பது தெளிவாகிறது. எதை நோக்கி இத்தனை விரைவாக பயணித்தோம் என்ற குழப்ப நிலை மட்டுமே மிஞ்சுகிறது. கடந்து வந்த பாதையின் பாலைகளும் சோலைகளும் கனவில் கண்ட பிம்பங்களாக மட்டுமே நினைவில் நிற்கின்றன .
வாழ்க்கை என்ற மிக சுவாரஸ்யமான புத்தகத்தின் பக்கங்களை படிக்காமல் புரட்டி பார்த்த அவசரம் வெறுப்பாகத்தான் உள்ளது .

வெள்ளி, 13 ஆகஸ்ட், 2010

தாய்

என்னை இந்த உலகிற்கு ஈன்றளித்த எனது தாய் உடல்நலக்குறைவால் மருத்துவ்மமனையில் உள்ளார். பூரண நலமுடன் விரைவில் வீடு திரும்ப என் கடவுள் பகவான் வெங்கையா சுவாமியை வேண்டுகிறேன்.

காதல்

காதல் என்ன ஒரு இன்பமான உணர்வு நானே கூட நினைக்கவில்லை என்னையும் அந்தத் தென்றல் தீண்டும் என்று, அவள் ஒரு தேவதை வாழ்வின் வசந்தங்களை எனக்கு எடுத்துக்காட்டிய என்னுயிதோழி அவள். சற்று முன்னர்தான் படித்தேன் காதல் ஒரு மனிதனின் வாழ்வை உயிர்ப்புலதாக்குகிரதேன்று ஆம் என்னை உயிர்பித்தது அவள் என் மீது கொண்ட காதல் தான் .
ஒரு மூங்கில் காற்றிய சிறு பொறி ஒன்று போதும் என் வாழ்வை நடத்தும் எரிசக்தி அவ்வல் கொண்ட காதல் தான். அந்த நிகழ்வுகள் நினைக்க நினைக்க இனிக்கும் காவியம் தான் .ஆனால் அதை காவியமாக சொல்ல எனக்கு தெரியவில்லை.
பெண் என்பது எவ்வளவு உன்னதமானது என்று அவளால்தான் உணர்ந்தேன் .அதை வார்த்தைகளில் வடிக்க நினைக்கும்பொழுதே அந்த இன்ப நினைவுகள் என்னை இன்பக்கடலில் மூழ்கடித்து விடுகின்றது.
பல நூறு மைல்களுக்கு அப்பால் இருந்தாலும் என்ன நீ வாழும் உலகில் உன்னை நினைத்து வாழும் வாழ்வே போதும் எனக்கு .நீ தந்த இனிய நினைவுகள் போதுமடி .

வெள்ளி, 9 அக்டோபர், 2009

నా పేరు అంగురాజ్ .నాక్కు తెలుగు కూడా ఒచ్చు .నేను ఆంధ్రాలో తాతాప్పు పతి సంసారాలు వియాపరంకోసం ఉన్నాను .ఆంత్ర ఒక్క మంచి తేసం .ఆ మనుసులు ఆ ఉప్పు కారం ఎక్కువ వేసిన తింటి ,అంతమైన వాత్తావరణం ,అమాకయమైన ఎతార్త మనుసులు అంత పాక నచ్చింతి .
నా తేవుతూ కూత నేల్లూరుల కొలకముతి బకవాన్ వెంకైయస్వామి . ఆ కుడి ఎంతో అంతమైనతి.
பதிவுலகம் எத்தனை வித விதமான பக்கங்கள்.ஆச்சரியமூட்டுகிறது பதிவுலகத்தின் விவரங்கள். நானும் முயன்று தான் பார்க்கிறேன் மனதில் உள்ள எண்ணங்களை வார்த்தைகளில் வடிப்பதென்பது சற்று கடினமாகத்தான் உள்ளது. இன்றைய விஞ்ஞானம் நமக்கு அளித்த மிகப்பெரும் கோடை இந்த இணையமும் அதை சார்ந்த இன்ன பிறவும் .
மனதின் எண்ணங்களை பகிர்ந்துகொள்ள எளிய வசதி இந்த வலைப்பதிவு.வலைப்பதிவர்களில் தான் எத்தனை விதம்.இலக்கியத்தை அறிந்து கொள்ள ,எழுத்தாளர்களை பற்றி அறிந்து கொள்ள ,நமது வாசிப்பு அனுபவத்தை விரிவு படுத்த என்று இதன் வசதிகள் ஏராளம் .
உலகம் என்பதன் பரந்துபட்ட நிலை .வினோதங்கள், மனிதர்கள் ,அவர்களது மாறுபட்ட வாழ்க்கை முறைகள், மொழி ,கலாச்சாரம் ,என்ற அனைத்தும் இங்கே விவாதிக்க படுகின்றது. வாழ்க்கையில் சிறந்த மனிதனாக ம்மட்டுமன்ரி சிறந்த வலைப்பதிவராக இருக்கவும் முயல்கிறேன்

வியாழன், 23 ஜூலை, 2009

வாழ்க்கை

ம்ம் என்னவென்று சொல்வது இந்த மானுட வாழ்வின் மகத்துவங்களை .வாழ்க்கை என்பதை பிறப்பிலிருந்து இறப்பை நோக்கிய பயணம் என்று கொண்டால் இந்த பயணத்தில் நாம் எதிர் கொள்ளும் அனுபவங்கள் தான் எத்தனை எத்தனை .வாழ்வை பற்றி சிந்திக்க சிந்திக்க அதன் பிரமிப்பு மேன்மேலும் கூடுகிறது.

திங்கள், 26 ஜனவரி, 2009

அனுபவம்

பிறப்பினில் வருவது யாதேனக்கேட்டேன்
- பிறந்துபார்
என இறைவன் பணித்தான்;
இறப்பினில் வருவது யாதேனக்கேட்டேன் -இறந்துபார்
என இறைவன் பணித்தான்;
மனையாள் சுகம் என்பது யாதேனக்கேட்டேன் -மணந்து பார்
என இறைவன் பணித்தான்;
அனைத்தும் அனுபவித்தரிவதே என்றால் -ஆண்டவனே
நீ எதற்கு என்றேன் ;
ஆண்டவன் சற்றே அருகில் வந்து அந்த அனுபவம்
என்பதே நன்தானப்பா என்றார்.

நமது வாழ்க்கை என்பதே அனுபவங்களின் தொகுப்பு தானே.
லைப் இஸ் நத்திங் பட் எக்ஸ்பீரியன்ஸ் என்ற படி வாழ்க்கை என்பது எதுவுமில்லை ,நாம் பெறுகின்ற அனுபவங்களித்தவிர.
இது ஒரு வெறுமை வாதமாக தோன்றினாலும் நிதர்சனம் என்பது எனது எனது கருத்து. நிகழ காலத்தில் வாழ்தல் , இறந்த காலத்தில் நடந்தவைகளை பற்றிய கவலை இன்றி எதிர் காலத்தை பற்றிய எதிர் பார்ப்புகள் இன்றி நிகழ காலத்தில் வாழ்தல் என்பது நமது வாழ்வை விழிப்புணர்வு உள்ளதாக்கும்.
இறந்த கால கவலைகளும் , எதிர்கால பயங்களும் நமது நிகழ்கால வாழ்வை அர்த்தமற்றதாக்குகின்றன. நிகழ்காலத்தில் வாழும்பொழுது நமது இருப்பு, சூழல், பற்றிய விழிப்புணர்வு அதிகமாகிறது.