புதன், 1 டிசம்பர், 2010

சுய புலம்பல்

வாழ்க்கை என்ன ஒரு விசித்திரமான அனுபவம். பிறப்பும் அதனை ஒட்டிய சிறு வயது அனுபவங்களும் ,குடும்ப உறவுகளும் பரந்த இந்த வெளி உலகமும் ,வளர்ந்த விதமும் , அந்தந்த வயதின் தேடுதல்களும் விரைந்து செல்லும் புகைவண்டியின் பயணத்தில் கடந்து செல்லும் காட்சிகளாக மறைந்து விடும் அதிசயமும் வியப்பாகத்தான் உள்ளது.
வாழ்க்கை ஒரு ஓட்ட பந்தயம் என்று நினைத்து பாதி தூரம் கடந்த பின்பு இங்கு பந்தயம் என்பதே இல்லை என்பது தெளிவாகிறது. எதை நோக்கி இத்தனை விரைவாக பயணித்தோம் என்ற குழப்ப நிலை மட்டுமே மிஞ்சுகிறது. கடந்து வந்த பாதையின் பாலைகளும் சோலைகளும் கனவில் கண்ட பிம்பங்களாக மட்டுமே நினைவில் நிற்கின்றன .
வாழ்க்கை என்ற மிக சுவாரஸ்யமான புத்தகத்தின் பக்கங்களை படிக்காமல் புரட்டி பார்த்த அவசரம் வெறுப்பாகத்தான் உள்ளது .

வெள்ளி, 13 ஆகஸ்ட், 2010

தாய்

என்னை இந்த உலகிற்கு ஈன்றளித்த எனது தாய் உடல்நலக்குறைவால் மருத்துவ்மமனையில் உள்ளார். பூரண நலமுடன் விரைவில் வீடு திரும்ப என் கடவுள் பகவான் வெங்கையா சுவாமியை வேண்டுகிறேன்.

காதல்

காதல் என்ன ஒரு இன்பமான உணர்வு நானே கூட நினைக்கவில்லை என்னையும் அந்தத் தென்றல் தீண்டும் என்று, அவள் ஒரு தேவதை வாழ்வின் வசந்தங்களை எனக்கு எடுத்துக்காட்டிய என்னுயிதோழி அவள். சற்று முன்னர்தான் படித்தேன் காதல் ஒரு மனிதனின் வாழ்வை உயிர்ப்புலதாக்குகிரதேன்று ஆம் என்னை உயிர்பித்தது அவள் என் மீது கொண்ட காதல் தான் .
ஒரு மூங்கில் காற்றிய சிறு பொறி ஒன்று போதும் என் வாழ்வை நடத்தும் எரிசக்தி அவ்வல் கொண்ட காதல் தான். அந்த நிகழ்வுகள் நினைக்க நினைக்க இனிக்கும் காவியம் தான் .ஆனால் அதை காவியமாக சொல்ல எனக்கு தெரியவில்லை.
பெண் என்பது எவ்வளவு உன்னதமானது என்று அவளால்தான் உணர்ந்தேன் .அதை வார்த்தைகளில் வடிக்க நினைக்கும்பொழுதே அந்த இன்ப நினைவுகள் என்னை இன்பக்கடலில் மூழ்கடித்து விடுகின்றது.
பல நூறு மைல்களுக்கு அப்பால் இருந்தாலும் என்ன நீ வாழும் உலகில் உன்னை நினைத்து வாழும் வாழ்வே போதும் எனக்கு .நீ தந்த இனிய நினைவுகள் போதுமடி .