திங்கள், 26 ஜனவரி, 2009

அனுபவம்

பிறப்பினில் வருவது யாதேனக்கேட்டேன்
- பிறந்துபார்
என இறைவன் பணித்தான்;
இறப்பினில் வருவது யாதேனக்கேட்டேன் -இறந்துபார்
என இறைவன் பணித்தான்;
மனையாள் சுகம் என்பது யாதேனக்கேட்டேன் -மணந்து பார்
என இறைவன் பணித்தான்;
அனைத்தும் அனுபவித்தரிவதே என்றால் -ஆண்டவனே
நீ எதற்கு என்றேன் ;
ஆண்டவன் சற்றே அருகில் வந்து அந்த அனுபவம்
என்பதே நன்தானப்பா என்றார்.

நமது வாழ்க்கை என்பதே அனுபவங்களின் தொகுப்பு தானே.
லைப் இஸ் நத்திங் பட் எக்ஸ்பீரியன்ஸ் என்ற படி வாழ்க்கை என்பது எதுவுமில்லை ,நாம் பெறுகின்ற அனுபவங்களித்தவிர.
இது ஒரு வெறுமை வாதமாக தோன்றினாலும் நிதர்சனம் என்பது எனது எனது கருத்து. நிகழ காலத்தில் வாழ்தல் , இறந்த காலத்தில் நடந்தவைகளை பற்றிய கவலை இன்றி எதிர் காலத்தை பற்றிய எதிர் பார்ப்புகள் இன்றி நிகழ காலத்தில் வாழ்தல் என்பது நமது வாழ்வை விழிப்புணர்வு உள்ளதாக்கும்.
இறந்த கால கவலைகளும் , எதிர்கால பயங்களும் நமது நிகழ்கால வாழ்வை அர்த்தமற்றதாக்குகின்றன. நிகழ்காலத்தில் வாழும்பொழுது நமது இருப்பு, சூழல், பற்றிய விழிப்புணர்வு அதிகமாகிறது.

நமது இலக்கியங்களும் , புதினங்களும் காதல் என்ற உணர்விற்கு அளித்த முக்கியத்துவத்தை நட்புக்கு அளித்ததாக தெரியவில்லை. நமது பால்யம் என்பது நினைவில் கொள்வதே நண்பர்களையும்,அவர்களை ஒட்டிய சம்பவங்களை நினைவு கொள்ளுதலே.
பால்யத்தின் பெரும் பொழுதுகள் நன்பர்களுடனே கழிகின்றன. வீட்டுக்கு புறத்திலுள்ள உலகம் என்பது நண்பர்கள் உதவியுடனே நமக்கு அறிமுகமாகிறது. முன் தொடர்பு ஏதுமில்லாத உறவு நட்பு ஒன்று தான். நட்பு என்பதன் முக்கியத்துவம் ஏனோ சரியாக வலியுருத்தபடாமலே உள்ளது.
காதல் என்பதை ஆண் பெண் நட்பாக பார்ப்பதே சரியானது. எனது பால்யத்தின் நினைவுகள் யாவும் எனாது நண்பர்களுக்குல்லானதான நினைவுகளாகவே நினைவில் உள்ளன. இருத்தல் என்பதே சக மனிதர்களுடன் உறவு கொண்டிருத்தல் என்ற ஒரு உளவியல் அறிகரின் கூற்றுபடி பால்யத்தின் நினைவுகள் அனைத்தும் நமது நண்பர்களை ,அவர்களை ஒட்டிய சம்பவங்களை நினைவுறுத்தும் நினைவளைகலாகவே உள்ளது.
இளமைகாலம் வரை நண்பர்கள் மாறினாலும் நட்பு என்பதன் தேவை முக்கியத்துவம் இழக்காது இருந்தாலும் திருமணம் ,குடும்பம் என்றான பின் நட்பு வட்டாரம் சுருங்கி விடுதல் இயல்பாக உள்ளது.
ஒவ்வொரு மனிதனின் உள்ளத்திலும் தனது நெருங்கிய நண்பனொருவனின் நினைவுகள் அழியாத சித்திரமாய் இருந்து கொண்டேஇருக்கும்
முகநக நட்பது நட்பன்று -நெஞ்சத்து
அகநக நட்பது நட்பு

வாழ்க்கை

மனப்பதிவுகளில் பொதிந்த எண்ணங்களை வலைப்பதிவில் வெளியிட நான் எடுத்த முதல் முயற்சி.
எந்தரோ மஹானுபாவுலு ; அந்தரிக்கி வந்தனமுலு .
மனிதனின் தேடல்கள் யாவும் புற உலகின் வெளிச்சத்தை கொண்டு அக இருளை நீக்க பயன்பட வேண்டும். சாமான்ய மானுட வாழ்வின் அன்றாட அத்தியாவசியங்களின் அலைக்கழிப்பில் நமது வாழ்வை யாருக்கோ தாரை வார்த்து கொடுத்தாற்போல் வாழ்ந்து வருகிறோம்.
எதோ ஒரு கணத்தில் எதிர்பாராத சந்திப்புகள், வாசிப்புகள், நமது புற உலகின் வளர்ச்சியயும் நமது அறியாமையையும் உணர்த்தும் பொழுது வாழ்க்கை குறித்த தேடலின் அவசியம் உணருகிறோம்.
அந்த உண்மை குறித்த எனது தேடல்கள் இனி வரும் மலர்களாக பூக்கும் .